Police Department News

சாலைகளை சீரமைத்த வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.சாம் பென்னட் அவர்கள்

சாலைகளை சீரமைத்த வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.சாம் பென்னட் அவர்கள்

வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிநடைபெறுவதால் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் சிரமப்பட்டு பாதைமாறி சிரமப்பட்டு சென்றிருந்தனர். பொதுமக்கள் நலன்கருதி வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சாம் பென்னட் அவர்கள் குருநானக் மற்றும் வேளச்சேரி மேற்கு பகுதியில் வரும் வாகனங்கள் செல்லும்படியாக பாதையை இரவுபகல் பாராமல் பணியை சரியான படி சீரமைத்து பொதுமக்களுக்கு பாதையை உருவாக்கி கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு ஊர் ஊராக சென்று அரிசி, கோதுமை மாவு பருப்பு சர்க்கரை போன்ற உணவு பொருட்களை தனது ஊதியத்தில் இருந்து எடுத்து உதவி செய்து வருகிறார். சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி பல்வேறு நன்மையான செயல்களில் ஈடுப்பட்டு காவல்துறையினருக்கு முன்உதாரணமாக திகழ்கிறார் வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சாம் பென்னட் அவர்கள்.பொதுமக்கள் பலர் இவரை பாராட்டி வருகின்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக. தென்சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரப மற்றும் பெருங்குடி செய்தியாளர் N.ஹரிஹரன்

    

Leave a Reply

Your email address will not be published.