Police Department News

காரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில் கடத்தியதாக சூப்பர்வைசர் உள்பட 2 பேர் கைது.

காரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில் கடத்தியதாக சூப்பர்வைசர் உள்பட 2 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி டாஸ்மார்க்கில் மேலாளர் வேலை பார்ப்பவர் வேல்மணி வயது (49) இவருக்கு சொந்த ஊர் திண்டுக்கல் அருகே உள்ள கும்மனம்பட்டியைச் சேர்ந்தவர். குமரம்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை அழைத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது டாஸ்மார்க் கடையில் இருந்து 396 மதுபான பாட்டில்களை காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் ஐ நோக்கி செல்வதற்காக விளாம்பட்டி கடந்து ஒரு தனியார் பேப்பர் மில் அருகே காரில் சென்றபோது அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்ட விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையில் போலீசார் காரை மடக்கி சோதனை செய்தபோது காரில் 396 பாடல்கள் எந்தவிதமான ஆவணங்கள் இன்றி சட்டத்திற்குப் புறம்பாக கடத்திச் செல்வதை கண்டு பிடித்தனர்,இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விளாம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேல் மணியையும், செந்தில் குமாரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.. நிலக்கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் இ நியூஸ் K.பூவரசன் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.