Police Department News

ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்திக்கொலை! மகனின் நண்பனுக்கு வலைவீச்சு!

விருதுநகர் மாவட்டம்:-

ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்திக்கொலை! மகனின் நண்பனுக்கு வலைவீச்சு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இறந்த பெண்ணின் மகனின் நண்பன் வெறிச்செயலா என்ற கோணத்தில் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் வசந்தம் நகர் பகுதியில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ராமமூர்த்தி.

இவரது மனைவி பிரேமா வயது 42.இவர்களுக்கு செல்வகுமார் என்ற 25 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர் .

மகளுக்கு திருமணமாகி பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்து கைக்குழந்தையுடன் வீட்டில் உள்ளார்.

மகன் செல்வகுமாரின் நண்பர் ரஞ்சித் வயது 25 .இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகின்றனர் .

இந்த நிலையில் ஒரு பிரச்சனை தொடர்பாக இருவரும் சண்டையிட்டு கொண்டதாகவும், ரஞ்சித் நண்பன் ஒருவரையொருவர் செல்வகுமார் அடித்து உதைத்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் செல்வகுமாரைபழிவாங்க காத்திருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பகல் 12 மணி அளவில் செல்வகுமார் வீட்டிற்கு தாக்குவதற்காக ரஞ்சித் சென்றுள்ளார் .

அங்கு தாய் பிரேமாவிடம் விசாரித்தபோது மகன் இல்லை என்று கூறியதாகவும், குடிப்பதற்கு ரஞ்சித் தண்ணீர் கேட்டு தண்ணீர் எடுக்க பிரேமா வீட்டிற்குள் சென்றபோது பின்னால் சென்று தோள்பட்டையில் கழுத்தில் கத்தியால் ஆழமாக குத்தினாராம்.

பின்னர் கத்தி குத்து காயங்களுடன் வீட்டிற்குள் வேகமாகச் சென்று மகன் மகள் இருந்த கதவை வெளியே பூட்டியதாகவும் பின்னர் கத்தியை வெளியே எடுத்துப் போட்டு விட்டு அங்கேயே கீழேவிழுந்து அதிகமாக ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே பிரேமா உயிரிழந்தார்.

ரஞ்சித் தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் கதவு திறக்கப்படாததால் உள்ளே இருந்து தனது தந்தை ராமமூர்த்திக்கு போன் செய்து அவர் அரை மணி நேரம் கழித்து வந்து கதவை திறந்த பின்னர் தான் இவர்களுக்கு கொலை நடந்த விவரம் தெரிந்தது.

தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தினர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் டிஎஸ்பி நாக சங்கர் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் விருதுநகரிலிருந்து ராக்கி வரவழைக்கப்பட்டது, கைவிரல், புகைப்பட நிபுணர்கள் மேற்படி இடத்தை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.