Police Department News

அருப்புக்கோட்டை நகராட்சியில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டுb

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டை நகராட்சியில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு…

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நிலஅளவைதுறையில் பணியாற்றிவருபவர் சர்வேயர் சிவசங்கரன் வயது40 அவரின் அலுவலக உதவியாளர் சூரியநாராயணன் வயது 56 ஆகியஇருவர் கையும் களவுமாக பிடிபட்டனர் .

பெயர் மாற்றம் செய்வதற்காக 12,000 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி கருப்பையா தலைமையில் நிலஅளவை பிரிவில் சோதனை நடைபெற்றுவருகிறது.

தொடர்ந்து நிலஅளவைபிரிவில் தொடர்ந்து வித்தியாசம் பாராமல் கராராக லஞ்சம் பெற்றதால் லஞ்சஒழிப்புத்துறையில் அதிகபுகார் சென்றதன் காரணத்தால் இந்த திடீர் ரெய்டு என்று சொல்லப்படுகின்றது.

இந்த சோதனையின்போது விசாரணை நடைபெறக்கூடிய கட்டிடம் முழுமையும் பூட்டப்பட்டுள்ளது.

யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை அலுவலகத்தின் வாயிலின் முன்பாக தனியார் வாகனம் மற்றும் டாடா சுமோவும் நிறுத்தப்பட்டுள்ளது.

சோதனை செய்யும் அதிகாரிகள் சாதாரணமக்களைப்போல லுங்கியுடன் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விசாரணை தொடர்ந்து 5 மணிநேரம் நடைபெற்றது.

விசாரணையானது முடியும் தருவாயில் உள்ள நிலையில் விசாரணை சம்மந்தமாக புகைபடமும் நமது போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.