Police Department News

அபிராமம் காவல்நிலைய பெண் தலைமை காவலருக்கு எஸ்.பி வெகுமதி அளித்து பாராட்டு.

அபிராமம் காவல்நிலைய பெண் தலைமை காவலருக்கு எஸ்.பி வெகுமதி அளித்து பாராட்டு.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி உட்கோட்டம்,அபிராமம் காவல் நிலைய சரகம்,நந்திசேரி சந்திப்பு சாலை அருகில்,28.04.2006-ம் ஆண்டு அபிராமம் காவல் நிலைய தலைமை காவலர் போஸ் என்பவரை சில சமூக விரோதிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது மற்றும் அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்ரமணியன் என்பவரும் சில சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கானது பரமக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்,கடந்த 23.09.2020-ம் தேதி விசாரணை முடிந்து மேற்படி இருவழக்கிலும் சம்பந்தப்பட்ட 5 நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வழக்குகள் தண்டனையில் முடிவுற காரணமாக இருந்த அபிராமம் காவல் நிலையை பெண் தலைமைக்காவலர் சண்முகப்பிரியா என்பவருக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு பத்திரம் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.