Police Department News

மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது. 48 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல், போலீசார் விசாரணை

மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது. 48 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல், போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக வந்த ரகசியத்தகவலை தொடர்ந்து அவணியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிகுண்ட கண்ணன், சக காவலர்களுடன் சிந்தாமணி, மேல அனுப்பானடி, சின்ன அனுப்பானடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சின்ன அனுப்பானடி வினாயகர் தெருவில் ஒரு பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பது தெரிய வந்தது, அந்த கடையின் உரிமையாளர் மனோகரன் மகன் மோஹன்பான்டி வயது 32, /2020, அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 48 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர், மேலும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.