பறக்கும் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படையில் உள்ள சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன் மற்றும் கமுதி உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆளில்லா பறக்கும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனங்களை படம்பிடிக்க 50 கையடக்க வீடியோ கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.