Police Recruitment

மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் வாலிபர் படு கொலை, திருநங்கை கைது

மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் வாலிபர் படு கொலை, திருநங்கை கைது

மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, முத்துச்சாமிபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் ராமன் வயது 65, இவர் தன் குடும்பத்துடன் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் தமிழரசன் இவர் திருமணம் முடிந்து வசதியாக வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகன் மதியழகன் கோமதி என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் உள்ளார் அஸ்வினி என்ற ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டார். மற்றும் ஒரு மகள் லெக்ஷிமியை மல்லாங்கோட்டையில் உள்ள கருப்பையா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இரண்டாவது மகன் மதியழகன் மதுரை, மாட்டுத்தாவணியில் பூ மார்கெட் அருகிலுள்ள முத்துப்பாண்டி என்பவரது டிபன் சென்டரில் அங்கேயே தங்கி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 ம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் ராமன் அவர்களுக்கு அவருடைய ஊரை சேர்ந்த பெருமாள் மகன் பிரபு என்பவர் போன் செய்து இரண்டாவது மகன் மதியழகன் மாட்டுத்தாவணி, நெல்மண்டி அருகில் உள்ள கருவேல முள் காட்டுக்குள் நிர்வாணமாக தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக தகவல் கூற ராமர் தனது மூத்த மகன் தமிழரசன், மற்றும் உறவினர்களுடன் விரைந்து வந்து பார்த்த போது தன் இளைய மகன் மதியழகன் தலையிலும் இடுப்பிலும் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் உடனே அண்ணாநகர் E3, காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் விரைந்து செயல்பட்டார், ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. சுபா அவர்கள் வழக்கு பதிவு செய்தார், ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்களின் தீவிர விசாரணையில், ஆனையூரை சேர்ந்த அருண்குமார் என்ற ரைசா வயது 21, இவர் ஒரு திருநங்கை, இவருடன் பணம் கொடுத்து சம்பவ இடத்தில் உல்லாசமாக இருந்துள்ளார், மேலும், மேலும் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார் இதனால் இவருக்கும் திருநங்கை ரைசாவுக்கு தகராறு ஏற்பட்டு மதியழகனை திருநங்கை தாக்கி படு கொலை செய்தது தெரிய வந்தது, விசாரணையில் திருநங்கை கொலை செய்ததை ஒத்துக் கொண்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.