Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம்

மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம்

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு பாரத் ஸ்டேட் பாங்க் ATM மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு(06/02/21) யாரோ பணம் எடுத்தவர்கள் ATM கார்டை உள்ளே சொருகி விட்டு பின் நம்பர் போட்டு விட்டு பணம் வரவில்லை என விட்டு விட்டு சென்றுள்ளனர் சிறிது நேரத்தில் பணம் வெளியே வந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மேலூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் இதை பார்த்தார். உடனடியாக ATM எந்திரத்திலிருந்த பணம் 5800 ஐ கைபற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம், என மேலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.