Police Recruitment

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!!

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!!

பொள்ளாச்சி கோவை ரோடு சூர்யா நகரில் வசித்து வருபவர் புஸ்ரி பானு. மகளுடன் வசித்து வரும் இவர் நேற்று இரவு ஜோதி நகரில் உள்ள தனது அக்கா மகன் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.