திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 109 (கஞ்சா 8, புகையிலை 1, போக்சோ 06, சட்டம் ஒழுங்கு 94) நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 470 நபர்களிடமிருந்து நன்னடத்தை பிணை பெறப்பட்டு நன்னடத்தை பிணையை மீறி […]
பயிற்சி காவலர்களுக்கு காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்கள் அறிவுரை
பயிற்சி காவலர்களுக்கு காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்கள் அறிவுரை தமிழக காவல்துறையில் காவலராக தேர்வு செய்யப்பட்டு விழுப்புரம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய காவலர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியில் உள்ள பயிற்சிக் காவலர்கள் களப்பணிக்காக மதுரை மாநகர காவல்துறையினருடன் இணைந்து மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களில் (27.10.2023 முதல் 30.10.2023) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். நேற்று மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., அவர்கள் […]
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு… மனைவியை குத்திக்கொன்ற கணவன்
மாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு… மனைவியை குத்திக்கொன்ற கணவன் குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரின் மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் சீதா காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், […]




