திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
விரைவில் அயோத்தி தீர்ப்பு எதிரொலி: காவலர்கள் விடுப்பு எடுக்க தடை அயோத்தி வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
அதனால் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமால் இருக்க முன்னெச்சரிக்கையாக காவலர்கள் தயார் நிலையில் இருக்க வரும் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் விடுப்பு […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த தருணத்தில் ஒரு மனித உயிரின் மதிப்பையும், வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தை மனதில் கொண்டு சாலை விதிகளை மதித்தும் நடந்து வருவது மிகவும் நல்ல […]
The Maiden edition of CISF T-10 Cricket Tournament successfully organized in Neyveli
BHARATHI STADIUM FOR T-10 CRICKET TOURNAMENT: The Maiden edition of CISF T-10 Cricket Tournament successfully organized in Neyveli The maiden edition of Neyveli T-10 Blast, a cricket tournament for CISF personnel, was concluded in Bharthi Stadium on 01.03.2021 after a thrilling final between Thermal Gladiators and Fire Scorchers. The match for 3rd place between Mine […]