திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
போலீஸ் ஏட்டு தற்கொலை
போலீஸ் ஏட்டு தற்கொலை முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி 42, பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார். நேற்று பணியில் இருந்தபோது நண்பரிடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு சென்று வருவதாக கூறினார். பின் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூர்த்தி உடலை போலீசார் கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
பனகல்சாலை ஒரு வழி பாதையாகமதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
பனகல்சாலை ஒரு வழி பாதையாகமதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு அரசு இராஜாஜி மருத்துவமனை – பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம்மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு இராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்களின் வாகன பயன்பாடு, வர்த்தக போக்குவரத்து மற்றும் 5000-க்கும் குறைவில்லாத பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காவும் 2000-த்திற்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணிக்கும் முக்கியமான சாலையாகும். மதுரை வைகை ஆற்றில் புதியதாக […]
விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டது
விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி அளிக்கப்பட்டது இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள Indian Penal Code, Criminal Procedure Code மற்றும் Indian Evidence Act ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக Bharatiya Nyaya Sanhita – 2023 (BNS), Bharatiya Nagarik Suraksha Sanhita – 2023 (BNSS) and Bharatiya Sakshya Adhiniyam – 2023 (BSA) வரப்பட்டுள்ளது. மேற்படி சட்டங்கள் எதிர்வரும் 01.07.2024ம் தேதி […]




