திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு.
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு. மதுரை மாநகரில், அரசு உத்தரவுப்படி காவல்நிலைய எல்லைகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.1 ) . மதுரை மாவட்டம் பெருங்குடி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட வார்டு எண்.10 ற்கு ( பெருங்குடி பஞ்சாயத்தது ) உட்பட்ட மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதுரை மாநகர் V2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.2 ) . மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட தனக்கங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த […]
திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் திருப்பூர் மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பொதுமக்களும் காவல் துறையினரும் சிறப்பாக விளையாடி பரிசுகளைப் பெற்றனர். திருப்பூர் மாநகர அலுவலக காவல் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் காவல் துறை ஆணையர் திரு. கார்த்திகேயன் இ. கா. ப அவர்கள் வழங்கினார்.
கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு.
கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேர்ந்த கலையரசி ( வயது.16),இவர் நேற்று மகேந்திரமங்கலம் அருகே கருக்கனஅள்ளியில் உள்ள தனது சித்தி வீட்டிற்க்கு வந்தவர் நீச்சல் பழகுவதற்காக சிறுமிகளுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது விவசாய கிணற்றிற்க்கு சென்றார்.நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது திடிரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த பாலக்கோடு தீயனைப்பு துறையினர், மாணவியின் உடலை மீட்டு […]