திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை
திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக், என்ஜினீயர். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவேதா (19). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சுவேதா சாத்தங் குடியில் கணவர் வீட்டில் தங்கி ஆலம்பட்டி யில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கர்ப்பமாக இருந்த சுவேதாவுக்கு கருவில் குழந்தை வளர்ச்சி இல்லை என தெரிய வந்ததால் […]
மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார்
மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே திம்மராயனஅள்ளி கிராமத்தை சேர்ந்த திவ்யா (வயது. 24)திவ்யாவின் தந்தை அர்ஜூனன் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால் பாட்டி குப்பம்மாளின் அரவனைப்பில் இருந்து வந்தார். கடந்த 4 வருடத்திற்க்கு முன்பு திவ்யாவை மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகுணசேகரன் என்பவருக்கு 2 ம் தாராமாக திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த […]
சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார்
சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார் 29.05.2021 யாருமே கண்டுகொள்ளாத நபர்கள் சென்னையில் அதிகம் பேர் வீடின்றியும் கேட்பாரற்றும் உணவு இன்றியும் வசித்து வருகிறார்கள்.இப்படி வாழும் மக்களுக்காக மனித நேயர் வாழும் கர்ணன் President Mr. V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இன்று திருவான்மியூர் சிக்னலில் Cotton House […]