Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்
புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம்

வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்து பார்வையிட்டார்(22.02.2021).

Commissioner of Police inaugurates newly set up “Aavin Parlour” at Commissionerate premises (22.02.2021).

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, காவல் ஆணையாளர், உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல் ஆணையரகத்தில் ஆவின் பார்லர் அமைக்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் ஆணையாளர் முனைவர். A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் நேரடி கண்காணிப்பில் இணை ஆணையாளர் தலைமையிடம் , மற்றும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப., அவர்கள் இன்று 22.02.2021 வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை காவலர்கள் , அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் திரு .A. அமல்ராஜ், இ.கா.ப., (தலைமையிடம்) , திரு .K. பவானீஸ்வரி, இ.கா.ப (போக்குவரத்து) இணை ஆணையாளர் திருமதி. S. மல்லிகா, இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.