Police Recruitment

மதுரை, செல்லூர், 50 அடி ரோடு பகுதியில் நகை திருட்டு, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர், 50 அடி ரோடு பகுதியில் நகை திருட்டு, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான 50 அடி, அஹிம்சாபுரம் 3 வது தெரு, பாஸ்கர் காபி பார் அருகில் கதவு இலக்கம் 35, முதல் மாடியில் வசித்து வருபவர் S. மணி மகன் சுரேஷ் வயது 33/21, இவரது மாமனார் P.இருளாண்டி அவர்கள், மதுரை தயிர் மார்கெட்டில் டீ கடை நடத்தி வருகிறார். இவர் தினசரி அதிகாலை தனது கடைக்கு பால் கொண்டு செல்லுவது வழக்கம் அது போல் கடந்த 18 ம் தேதியன்று அதிகாலை 2 மணிக்கு பால் பாக்கெட் கொண்டு சென்றார் அவ்வாறு பால் பாக்கெட் கொண்டு செல்லும் போது கதவை பூட்டாமல் திறந்து வைத்து வீட்டு சென்றுள்ளார், அன்று அதிகாலை 3 மணியளவில் சுரேஷ் மனைவி கழிவறைக்கு செல்லும் போது அவரது கைப்பை திறந்த நிலையில் சிதறிக்கிடந்தது இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் மனைவி கைப்பையை எடுத்து சரிபார்த்த போது அதிலிருந்த தங்க நெக்லஸ், மற்றும் 1500/− ரூபாய் , நோக்கியா செல் போன் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. உடனே செல்லூர் D2, காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஶ்ரீதரன் அவர்கள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.