கொடைக்கானலில் போதை ஸ்டாம்பு விற்பனை−வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளம் பெண்களுக்கு போதை வஸ்து அடங்கிய எல்.எஸ்.டி.ஸ்டாம்பு மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட 32 போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாகக் கடந்த 2019 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அபிநாத் என்ற வாலிபரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.