Accidents

விழுப்புரத்தில் பின்னால் வந்த லாரி மோதி காவலர் உயிரிழப்பு

விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவலர் ஒருவர் பின்னால் வந்த லாரி மோதி பலியானார். பெரியதச்சூர் காவல் நிலைய காவலரான பிரகாஷ், நேற்றிரவு பணி முடிந்து சொந்த ஊரான சூரப்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கே.வி.கே. திரையரங்கின் அருகே, பின்னால் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் கீழே விழுந்த பிரகாஷ் பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நிறுத்தாமல் சென்ற லாரியை, சிட்டாம்பூண்டி என்ற இடத்தில் பிடித்த செஞ்சி போலீசார், ஓட்டுநரை கைது […]

Accidents

கோவை மாவட்டம் கேவில் பாளையம் எனும் இடத்தில் இளைஞர்கள் இருவர் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் குடி போதையில்

ஒருவரை ஒருவர் வேகமாக முந்திக்கொண்டு சென்றனர் அப்பொழுது எதிரே வந்த (TN 38 BH8263) என்ற வாகனம் மீது ஒருவர் பலமாக மோதினார் (TN 38 BZ6908),மேலும் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதையடுத்து கோவில் பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். REPORTER MADHAN PRABHU M

Accidents

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் உதவி-ஆய்வாளர் பரிதாபமாக சாவு

ஈரோடு: பவானி அருகே உள்ள பெருமாள்கரடை சேர்ந்தவர் திலகன் (52). இவர் சத்தியமங்கலம் அருகே கெஞ்சனூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து வேலை விஷயமாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக கொண்டையம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள காந்திநகருக்கு […]