Police Department News

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று கொண்டிருக்க போட்டியில் மதுரை ரைபிள் கிளப் மாணவ-மாணவிகள் அமர் சக்கரவர்த்தி 1 வெண்கல பதக்கமும், சாம் ஜார்ஜ் சஜன் 1 வெள்ளி […]

National Police News

சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டு (HALL TICKET) வெளியீடு

சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டு (HALL TICKET) வெளியீடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) மற்றும் 12.01.2020 (பொது விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் தேர்வுக்கான Hall Ticket-ஐ இணையாதள முகவரியான http://www.tnusrbonline.org/ என்ற Link -ன் மூலம் […]

Police Department News

`வாழவேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே!’- இளம்பெண்ணின்

`வாழவேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே!’- இளம்பெண்ணின் மரணத்தால் கதறிய பட்டுக்கோட்டை குடும்பம்குறிப்பாக நாத்தனார் எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல் அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்ய சொல்வது போன்ற கொடுமைகளை செய்து வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து விட அவரது தந்தை எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை போலீஸார் கைது […]

Police Department News

கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி மாயம்…24 மணி நேரமாக தேடும் பணி தீவிரம்…

கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி மாயம்…24 மணி நேரமாக தேடும் பணி தீவிரம்…! போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்க இறங்கிய கல்லூரி மாணவன் கடலில் மூழ்கிய சம்பவம் அரிச்சல்முனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கர்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளனர். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர் சனிக்கிழமை இரவில் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து தங்கியுள்ளனர். ஞாயிறன்று காலை 8 மணியளவில் அரிச்சல்முனை பகுதிக்கு […]

Police Department News

கல்விக்கண் திறந்த காமராஜர் சிலைக்கு அவமதிப்பு! -ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷமிகளின் இழிசெயல்!

கல்விக்கண் திறந்த காமராஜர் சிலைக்கு அவமதிப்பு! -ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷமிகளின் இழிசெயல்! தமிழகத்திற்கே கல்விக்கண் திறந்தவர் காமராஜர். அந்தப் பெருந்தலைவரின் திருவுருவச் சிலையில் செருப்பை வைத்து அவமதித்துவிட முடியுமா? இத்தகைய இழிசெயலைச் செய்தவர், நிச்சயம் அகக்கண் அற்றவராகத்தான் இருப்பர். ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்படி ஒரு சம்பவம் இன்று நடந்து பலரையும் கொந்தளிக்கச் செய்துவிட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் காமராஜரின் வெண்கல சிலை உள்ளது. யாரோ விஷமிகள், அச்சிலையின் மீது செருப்பை வைத்துவிட்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காங்கிரஸ் கமிட்டி காவல்துறையிடம் புகார் மனு அளித்தது. […]

Police Department News

நாங்குநேரி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு சிறுவன் மோதிரத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

நாங்குநேரி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு சிறுவன் மோதிரத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் வானமாமலை. இவரது மகன் செல்வகுமார் (15). இவர் விஜயநாராயணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் நாங்குநேரி பெரிய குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள படித்துறையில் சுமார் முக்கால் பவுன் மதிக்கக்கூடிய மோதிரம் ஒன்றை அவர் கண்டு எடுத்துள்ளார். பின்னர் […]

Police Department News

ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்…

ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்… திருச்சி: “டிரைவர் இல்லையா.. பரவாயில்லை, சாவியை மட்டும் குடுங்க” என்று கேட்டு.. ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர் கணேஷ்.. மனிதநேயம் தழைக்கும் இந்த சம்பவத்தையடுத்து கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள பகுதி புளியவலசு. இங்கு வசித்து வரும் தம்பதி தியாகராஜன் – சாந்தி.. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மாருதி காரில், […]

Police Department News

தேர்தலின் போது வீறிட்ட பெண் குரல்! பாலியல் வழக்குப்பதிவு செய்த பிறகே வாக்குப்பதிவு!

தேர்தலின் போது வீறிட்ட பெண் குரல்! பாலியல் வழக்குப்பதிவு செய்த பிறகே வாக்குப்பதிவு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்த 27-ஆம் தேதி, தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடிகளுக்கு சென்ற வண்ணம் இருந்தனர் மக்கள்.விருதுநகர் மாவட்டம் – ஏழாயிரம்பண்ணை அருகிலுள்ள ரெட்டியபட்டியிலும், கிராமத்தினர் பலரும் வாக்களிக்கச் சென்றுவிட்டனர். அதுதான் தருணம் என, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுத்திரராஜன், வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் […]

Police Department News

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்! கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் குருபிரசாத். இவர் தனது உறவினர்களுடன் இனோவா காரில் காஞ்சிபுரம் சென்று, அங்கே அவரது மகள் திருமணத்திற்காக புடவைகளை வாங்கி கொண்டு, பின்பு மீண்டும் காரில் மாண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வந்த போது காரின் இன்ஜின் பகுதியில் புகை வருவதைக் கண்ட குருபிரசாத் காரை உடனடியாக […]

Police Department News

தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ?

தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ? தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக டூவிலரில் வரும் மர்ம ஆசாமி பெண்களில் அதிரடியாக செயின் பறித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் இந்த செயின் கொள்ளையன் திருச்சியை குறி வைத்து தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் திருச்சி மாநகர கமிஷனர் வரதராஜீலு துணை ஆணையர் வேதரத்தினத்திடம் தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டார்.இந்தநிலையில் திருச்சி கே.கே.நகர் […]