Police Department News

பிரபல கொள்ளையன் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகரை சேர்ந்தவர் விஜயன் என்கிற விஜயகுமார்(29). பிரபல கொள்ளையனான இவர் மீது சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடைசியாக விஜயகுமாரை வாழப்பாடி காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 19-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். […]

Police Department News

காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?- தேர்வுத்துறை விளக்கம்

தமிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் முறைப்பற்றி சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் ( grade-2 constable) (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்). சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]

Police Department News

சேலத்தில் பிரபல கொள்ளையன் மர்மான முறையில் கைது காவல்துறையினர் விசாரணை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசஞ்சாவடி பக்கமுள்ள மைக்ரோ ஸ்டேசன் பஸ்நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை ஒட்டியுள்ள சேலம் – விருத்தாசலம் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக வாழப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்திஇ வாழப்பாடி ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரெயில் தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் சேலம் சூரமங்கலம் ரெயில்வே […]

Police Department News

மதுரையில் இந்திய குடியரசு தலைவர் அவர்களை காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் வரவேற்றார்

மதுரை: மதுரையில் கடந்த (23.12.2017) அன்று மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு. இந்திய குடியரசு தலைவர் அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் வரவேற்றார்.

Police Department News

திருப்பூரில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் அருகே நேருநகரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை தினமும் அதிகாலையில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு ராம்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார். மார்கழி மாத பூஜைக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் […]

Police Department News

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் வாகனங்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: 5.12.2017 மற்றும் 26.12.2017 தேதிகளில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் மற்றும் எஸ்.பி. பட்டணம் ஆகிய இடங்களில் எவ்வித அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருடிய 1) பாண்டி (35) 2) டேவிட் (23) 3) லியோ (19) அறிவித்தி ஆகியோரையும் மற்றும் அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு மணல் அள்ளும் இயந்திரம் (without Reg. No) ஒரு டிப்பர் லாரி (Reg. No: TN 19 D 8752) மற்றும் ஐந்து ட்ராக்டர்களும் […]

Police Department News

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வு

தமிழகக் காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்காகவும், தடுப்பதற்காகவும் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பயனாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியப் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதன்மை பெருநகரமாக சென்னையை அறிவித்துள்ளது பெருமைக்குரிய நிகழ்வாகும்

Police Department News

ஜெ.தீபா வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 3 ஆட்டோக்களில் சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், தீபா பேரவை அலுவலகம் மற்றும் வீடு மீது கற்களை வீசினர். இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளிகள் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தனர். உடனே ஆட்டோவில் வந்த நபர்கள், ஆட்டோவிலேயே தப்பிச் சென்றனர். இது குறித்து தீபா பேரவை சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.