திரு.சக்கரவர்த்தி, த/பெ.தனபால், பாபு நகர், ஐய்ராவதநல்லூர், மதுரை என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்திருப்பதாகவும், கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூபாய்.4,47,500/- தவரவிட்டதாகவும், அவற்றை கண்டுபிடித்து தரும்படியும் கடந்த 30.11.2019 தேதி மதுரை மாநகர் B3-தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தேவி அவர்கள் CCTV கேமிரா பதிவுகளை சேகரித்து புலன் […]
Police Department News
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை 02.12.2019ம் தேதி தலைமைச் செயலகத்தில் வாழ்த்து பெற்ற காவல்துறை
வாழ்த்து பெற்ற காவல்துறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை 02.12.2019ம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்¸ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர்¸ இ.ஆ.ப.¸ காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி¸ இ.கா.ப.¸ ஆகியோர் சந்தித்து¸ புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்¸ இராமநாதபுரம் மாவட்டத்தில் FRIEND OF POLICE திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருதும்¸ தூய்மையான காவல் நிலையப் பராமரிப்பு பணிகளுக்காக […]
விருதுநகரில் அரசுப்பேருந்து கண்ணாடி மீது கல்வீசிய மர்ம நபர்கள் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- விருதுநகரில் அரசுப்பேருந்து கண்ணாடி மீது கல்வீசிய மர்ம நபர்கள் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர் அதன் விபரம் பின் வருமாறு…. விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டி வரை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்தபொழுது எதிரே இருந்து வந்த மர்ம நபர்கள் இருவர் பேருந்தின் முன்புற கண்ணாடி மீது கல் வீசி […]
ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை மாணவர்கள் தூய்மை செய்தனர்.
ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை மாணவர்கள் தூய்மை செய்தனர். .இன்று (03.12..2019) அமெரிக்கன் கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட (NSS) மாணவர்கள் மற்றும் மதுரை மாநகர காவலர்கள் இணைந்து மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மேற்படி பணிகளை நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்
மனநலம் பாதிக்கப்பட்டவரை உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு
விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 75 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், கடந்த 17.08.2019-ம் தேதியன்று கோவில்பட்டி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தனியாக நின்றிருந்தார். அப்போது இரவு ரோந்து பணியிலிருந்த நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் திருமதி.சுகாதேவி அவர்கள் பெண்ணை மீட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அப்பெண்மணி குணமடைந்து தனது குடும்பத்தை பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவரது […]
`மழையில் நனைந்த சடலங்கள்; போராடியவர்கள் மீது தடியடி!’ – மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏடிகாலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்பிரமயம் என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. அவரது வீட்டைச் சுற்றி 10 அடிக்கு கருங்கற்களால சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதை 15 அடியாக உயர்த்தி சுற்றுச்சுவரை ஆறுமுகம் கட்டியுள்ளார். அவர்களின் வீட்டில் இருந்து தாழ்வான பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சிவசுப்பிரமணியம் வீட்டின் […]
பாஷை தெரியாத ஊரு, பானிபூரி தான் சோறு!’.. தீரன் பட பாணியில்.. சென்னை, போலீஸாரின் 5 நாள் வேட்டை!
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆனந்தன் மகனான 27 வயது பிரபாகரன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மோல்டிங் கம்பெனி நடத்தி வந்தார். ‘பாஷை தெரியாத ஊரு; பானிபூரி தான் சோறு!’.. தீரன் பட பாணியில்.. சென்னை போலீஸாரின் 5 நாள் வேட்டை! தனது நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி வந்த பிரபாகரன், கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில். உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸார் குழு […]
கோவையில் மூதாட்டிகொலை வழக்கை துரித விசாரணை செய்யாத ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!!
கோவையில் மூதாட்டி கொலை வழக்கை துரித விசாரணை செய்யாத ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து மாநகர ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். கடந்த ஜீன் மாதம் கோவை ம.ந.க வீதியில் ரங்கநாயகி (71) என்ற மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய கணவர் சுப்பிரமணி கடைக்கு சென்ற சில மணி நேரத்திற்குள் மனைவி இறந்தது குறித்து வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் […]
பள்ளி கல்லூரி மானவிகளே உஷார், உடன் பயிலும் சக மானவர்களே மானவியை பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது
கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்(22), பிரகாஷ்(22),நாராயணமூர்த்தி(32),கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 26.11.2019 அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியை […]
வெவ்வேறு கையெழுத்தில் 3 பக்க டைரி விஸ்வரூபம் எடுக்கும் புதுச்சேரி உதவி ஆய்வாளர் மர்ம மரணம்..
புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் கடந்த 21-ம் தேதி காவல்நிலைய வளாகத்தில் உள்ள ஓய்வறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறையினர் கூறிவரும் நிலையில் அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறி வருகிறார்கள். உடலை வாங்க மறுத்து சாலை மறியல் புதுச்சேரியை உலுக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து, அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் கொடுத்த அழுத்தத்தால்தான் விபல்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறிய உறவினர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை […]










