Police Department News

மதுரை ஜெயிலில் போக்சோ கைதி சாவு

மதுரை ஜெயிலில் போக்சோ கைதி சாவு

ஜெயிலில் போக்சோ கைதி சாவடைந்தார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோவில்பாப்பாக்குடி, மல்லிகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). இவர் சில மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைதானார். இதில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

ஆறுமுகத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை ஜெயில் வளாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.