பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணி வகுப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பை சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., […]
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு முககவசம், கையுறைகள், வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். தேனி பழைய பேரூந்து நிலையம் நேரு சிலை அருகில் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி IPS அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் முக கவசம், கையுறைகள் வழங்கினார்.
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்-2025″ முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு, […]