Police Department News

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அரி பால சுப்பிரமணியன் (வயது 33). பீடி வியாபாரி.
இவர் தனது ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து நேற்று மாலை தனிப்படை போலீசார், குருவன்கோட்டை – துத்தி குளம் சாலையில் அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது, ஆட்டோவில் பீடி மூட்டைகளுக்கு நடுவில் 544 புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரி பால சுப்பிரமணியனை போலீசார் பிடித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அரி பாலசுப்பிர மணியனை ஆலங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? அரி பால சுப்பிரமணியனுக்கு புகையிலை கிடைத்தது எப்படி? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.