
இரு சக்கர வாகனம் விபத்து, போலீஸ் எஸ்.ஐ., பலி
திருமங்கலம் நகர் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,வாசிமலை வயது 51, இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு பணி முடித்து நேற்று காலை வீட்டிற்கு செல்வதற்காக உசிலம்பட்டி திருமங்கலம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ( ஹெல்மெட் அணியவில்லை) சென்றார்
சின்ன பொக்கம்பட்டி பிரிவு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
