Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

23.10.2024 திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(21) என்பவரை பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜசேகரன் அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (23.10.2024) இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பால்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,05,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

மேலும் இந்தாண்டு இதுவரை 47 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.