லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை காவலர் துக்காராம் குடியரசு தின விருது பெற்றார்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் துக்காராம். துறை சார்ந்த பணியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அவரது திறமையான பணியைப் பாராட்டும் வகையில், குடியரசு தின விழாவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங் இகாப பரிந்துரையின் பேரில், அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சிறப்புப் பாராட்டை பெற்றதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அவரது சக அலுவலர்கள் அவரை பாராட்டி கௌரவித்தனர்.