Police Department News

தமிழ்நாடு காவல்துறை கிழக்கு கடற்கரை நீலாங்கரை பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு

தமிழ்நாடு காவல்துறை கிழக்கு கடற்கரை நீலாங்கரை பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு

தமிழ் நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் ஆணைக்கிணங்க சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கிழக்குகடற்கரை சாலை நீலாங்கரை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. பரசுராமன் அவர்களும் அவருடன் பெண்போக்குவரத்து காவலர் திருமதி ஜீவா அவர்களும் இணைந்து சோழிங்கநல்லூர் மற்றும் E.C.R சந்திக்கும் சாலையில் தினம்தோறும் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம் முககவசம் வாகன ஆவணம் சரிபார்த்தும் மற்றும் அவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் இரண்டு பேர் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளிடம் சட்ட படி அபராதம் விதித்தும் முககவசம் இல்லாமல் நடந்துசெல்லும் பாதசாரிகளிடம் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் நல்ல அறிவுறைகளையும் வழங்கி வருகிறார்கள். பெண்களான வாகன ஓட்டிகளிடமும் மிகவும் கனிவான பேச்சுடன் மற்றும் சாலைபாதுகாப்பு மட்டுமின்றி மனரீதியான பயிற்சி பற்றியும் காரணமின்றி சுற்றும் வாலிபர் மற்றும் சாலையில் செல்லும் முதியவர்கள் ஆகிய அனைவரிடமும் நன்மையான ஆலோசனையை வழங்கிவருகிறார் என்று அங்கு செல்லும் பொதுமக்களே கூறுகின்றனர். இப்படிப்பட்ட செயல்கள் நீலாங்கரை சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.பரசுராமன் மற்றும் பெண் காவலர் திருமதி ஜீவா அவர்களும் இணைந்து தங்களது குடும்பத்தை மறந்து காலில்வலி வெயில் மழை சரியான நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அனேக கஷ்டங்கள் மத்தியிலும் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பொறுப்பாகவும் நேர்மையாகவும் தியாகமாகவும் தங்களது பணியை சிறபாபாக செய்து வருகின்றனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.பரசுராமன் அவர்கள் இதுமட்டுமின்றி அனேக நன்மையான காரியங்கள் தன்னுடைய சொந்த செலவிலும் உதவிகள் பல புரிந்து வருகிறார்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக T.பிரபு தென்சென்னை மாவட்ட செய்தியாளர்

     

Leave a Reply

Your email address will not be published.