Police Recruitment

கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜன்(62). இவரது மனைவி சுமதி. நாகராஜன் தனது மனைவியின் பெயரில் அதே பகுதியில் மூன்று மனைகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், பத்திரப்பதிவுக்காக சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த நாகராஜன், […]

Police Recruitment

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!!

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!! பொள்ளாச்சி கோவை ரோடு சூர்யா நகரில் வசித்து வருபவர் புஸ்ரி பானு. மகளுடன் வசித்து வரும் இவர் நேற்று இரவு ஜோதி நகரில் உள்ள தனது அக்கா மகன் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு […]

Police Recruitment

திருவில்லி புத்தூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது…

விருதுநகர் மாவட்டம்:- திருவில்லி புத்தூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது… திருவில்லிபுத்தூர் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் நடந்துவந்த நிலையில். 1.கோயில் உண்டியல் திருட்டு 2 . செல்போன் திருட்டு 3.செயின் பறிப்பு என கடந்த வருடத்தின் 10 வது மாதம் திருவில்லி புத்தூரில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் மடவார்வளாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலின் உள்ளே […]

Police Recruitment

காவல் ஆய்வாளரின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

காவல் ஆய்வாளரின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வந்த மாற்றுத் திறனாளிகளின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்க்கரசி அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்..மேலும் போராட்டம் முடித்து மாற்றுத்திறனாளிகள் வீடு செல்லும் வேளையில் அவர்களை தாலுகா அலுவலகத்திலிருந்து தனது காவல் வாகனம் மூலம் பேருந்து நிலையம் செல்ல உதவினார்கள்.. காவல் ஆய்வாளரின் இந்த […]

Police Recruitment

விழுப்புரம் மாவட்டம்:- பல கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் செய்த மாற்றுதிறனாளிகளுக்கு விருந்துணவு…

விழுப்புரம் மாவட்டம்:- பல கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் செய்த மாற்றுதிறனாளிகளுக்கு விருந்துணவு… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 475 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைதுசெய்து தங்க வைக்கப்பட்டனர். போராட்டம், மறியல் […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்:- … விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் இ.கா.ப அவர்கள் முன்னிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Police Recruitment

மதுரை மாநகரத்தில் ஒரே நாளில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

மதுரை மாநகரத்தில் ஒரே நாளில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் மதுரை நகரில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், அதன்படி ஆய்வாளர் மணிகண்டன் மத்திய குற்றப்பிரிவு, செல்வி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, எஸ்தர் குற்றப்பதிவேடு, குமரன் கன்ட்ரோல் ரூம், முகமதுஇத்ரீஸ் மற்றும் பெத்துராஜ் தீவிர குற்றத் தடுப்பு பிரிவு, வசந்தா, குற்றப்பிரிவு மீனாட்சியம்மன் கோவில் காவல் நிலையம். சரவணகுமார் உயர்நீதி மன்றம் சட்டம் ஒழுங்கு, பிரியா உயர் நீதி மன்றம் குற்றப்பிரிவு, காந்திமதி திருநகர்,சீனிவாசன் […]

Police Recruitment

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்கள் சென்னையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்கள் சென்னையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தரமணி பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்ற ஹேமச்சந்திரன் (எ) அப்பு உட்பட 3 குற்றவாளிகள் J-13 தரமணி காவல் குழுவினரால் கைது (08.02.2021). Trio nabbed by J-13 Taramani police team for attempting to steal money from temple hundial (08.02.2021) சென்னை, தரமணி, பகுதியில் உள்ள வீரசக்தி விநாயகர் கோயிலிலிருந்து 06.02.2021 அன்று கோயில் […]

Police Recruitment

மீஞ்சூர் அருகே மனைவியின் கண் எதிரேயே கள்ளக்காதலனை அவரது கணவர் அடித்துக்கொன்றார். பின்னர் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும்போது கணவன், மனைவி இருவரும் போலீசாரிடம் சிக்கினர்.

மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சியில் அடங்கிய ராமநாதபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தேவேந்திரசிங் (வயது 41). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி சாயா (33). இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக அங்கு தங்கியிருந்தனர். அதே பகுதியில் மனோஜ் (30) என்பவரும் தங்கி இருந்தார். இவரும் அதே மாநிலத்தை சேர்ந்தவர்தான். இவர்கள் 3 பேரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். கள்ளக்காதல் தேவேந்திரசிங் வெளிவேலைகளுக்கு சென்றுவிட்டார். […]

Police Recruitment

சென்னை விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசித் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர் அணிந்து இருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் […]