வந்திதா பாண்டே மத்திய இளைஞர் விவகார அமைச்சக இயக்குநராக நியமனம் – உடனடி மாநில அரசு பதவியில் இருந்து விடுவிப்பு. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்வரை மத்திய அரசின் பதவியில் அவர் தொடர்வார் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வந்திதா பாண்டேவின் கணவரும் திருச்சி சரக டிஐஜியுமான வருண்குமார், திருச்சி காவல் கண்காணிப்பாளராக […]
Day: February 8, 2025
திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு
திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் இன்று 08.02.2025, WPC 428,447, என்பவர்களால் திருவான்மியூர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில் நிலையங்களில் வந்து செல்லும் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு செய்தும், பெண்கள் பெட்டியில் ஆண்கள் எவரேனும் ஏறினால் உடனடியாக ரயில்வே காவல் உதவி எண்கள்- 1512 மற்றும் 9962500500 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.என்பதை கனம் ஐயா அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
மதுரை மாவட்டம்:-அலங்காநல்லூர்டூவீலரை அடித்துநொறுக்கியவாலிபர்கள்கைது
மதுரை மாவட்டம்:-அலங்காநல்லூர்டூவீலரை அடித்துநொறுக்கியவாலிபர்கள்கைதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாத கவுண்டன்பட்டியைசேர்ந்த மணிமாறன் (24) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தைகீழக்கரை ஜல்லிக்கட்டுமைதானம் அருகே நேற்று முன்தினம் (பிப்4) தேதி நிறுத்திவிட்டு அங்குள்ளதனதுவயலை பார்க்கச்சென்றுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (25), விஜய் (23), கருப்பு (24),நிரஞ்சன்(22),ஆகியோர் சேர்ந்து இருசக்கரவாகனத்தைஅடித்துநொறுக்கியுள்ளனர்.இதுகுறித்து மணிமாறன் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில்கொடத்தபுகாரின்பேரில் அலங்காநல்லூர்போலீசார் நேற்று(பிப்5) தேதி நால்வரையும் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
மதுரை: கொத்தடிமைதொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
மதுரை: கொத்தடிமைதொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காவல் ஆணையர் ,திரு. லோகநாதன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் ஆணையர் அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரி
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரிமதுரை அருகே கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் லாரி டிரைவர்,ஹரி பிரதீப் (27) என்பவர் அம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தென்னைகிடுகுகளைஏற்றிச் சென்றபோது(பிப்7தேதி) மதியம்கள்ளிக்குடி சிவரக்கோட்டைஅருகேநான்கு வழிச்சாலையின் குறுக்கே லாரி சென்றபோதுசென்றமின் கம்பியில் உரசியது. இதனால் காய்ந்ததென்னைக்கிடுகுகள்தீப்பிடித்து லாரி முழுவதும் பரவியது.உடனடியாக கள்ளிக்குடி தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து.தீயணைப்பு வீரர்கள்2மணிநேரம்போராடிதீயைஅணைத்தனர்.இதுதொடர்பாக கள்ளிக்குடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.