Police Department News

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

காயமடைந்த தொழிலாளர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.

மேலும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலியை செலுத்தி, அவர் தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். உரிய நிவாரணம் வழங்க அரசு எப்போதும் உறுதுணையாக உடன் நிற்கும். எதிர்காலங்களில் இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.