
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் அவர்களின் NDTV தொலைக்காட்சி நேர்காணல் நாள் -12.06.2025
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 12 ஜூன் 2025 அன்று NDTV செய்தி சேனலுக்கு ஒரு நேர்காணல் வழங்கினார். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்து பேசினார். அந்த நேர்காணலின் சாராம்சம் பின்வருமாறு:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த பதில்:
NCRB புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டில் குற்றச்சாட்டு விகிதம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. தேசிய சராசரியான 66 உடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குற்ற விகிதம் 22 ஆக உள்ளது, இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பரவலான குற்றங்கள் பற்றிய கருத்து ஆதாரமற்றது என்பதைக் காட்டுகிறது.
தமிழ்நாடு காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களை ஊக்குவிக்கிறது. ஏனெனில், இவ்வகை குற்றங்கள், சமூகத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்பட வேண்டும்.
மேலும், இவ்வகையான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், ஆனால் அது விழிப்புணர்வின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, 2023 இல் 100 POCSO வழக்குகளில் நேரடி புகாரளிப்பு 88% இருந்தது, அது 2024 இல் 76% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், POCSO வழக்குகள் அதிகமாகப் பதிவாகி இருப்பதற்கு தமிழ்நாட்டில் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெளிவாகிறது.
