சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு
பழங்காநத்தம், திருப்புரங்குன்றம, தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவ மனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல்நிலை காவலர் திரு. திருப்பதி அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.