Police Department News

சென்னை, தலைமை செயலகத்தில் பெரிய மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த முத்தயால்பேட்டை போக்கு வரத்து காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னை, தலைமை செயலகத்தில் பெரிய மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த முத்தயால்பேட்டை போக்கு வரத்து காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

கடந்த 2 ம் தேதி காலை சுமார் 9 மணியளவில் தலைமை செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழைமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது, அப்போது அங்கே பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்கள் மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்ற துயர செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தமடைந்த தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த வறுத்தத்தை தெரிவித்ததோடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூயாய் வழங்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.