கொரோனா அபராதத் தொகையை காவல்துறைதான் வசூல் செய்ய வேண்டுமா?
கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடம் அபராதம் விதிப்பதும் அபராத தொகையை வசூல் செய்வதும் யாருடைய பணி என்ற விபரம் பொதுமக்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை, இந்த பணிகள் அனைத்தும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, நகராட்சி, ஊராட்சி, மற்றும் மாநகராட்சி சம்பந்தப்பட்டவை. கொரோனா நோய் தொற்று முதலில் பரவியபோது மாநகராட்சிகள்,நகராட்சிகள், ஊராட்சிகள், கிருமி நாசினி தெளிப்பில் முழு வீச்சில் செயல் பட்டன. தற்போது கொரோனா தொற்று 2 வது அலை முழுவேகம் எடுத்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி, சுகாதாரத்துறை, சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு, மாஸ்க் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏதும் ஏற்படுத்தவில்லை மாறாக அபராத தொகைகககான ரசிதுகளை மட்டும் காவலர்களிடம் கொடுத்து அபராத தொகை வசூல் செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் , ஆனால் காவலர்கள் அனைவரும் மக்கள் நலனில் மீது கொண்ட அக்கரையின் காரணமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடமிருந்து அபராதமும் வசூல் செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உள்ள கடமை என்னவென்றால் இந்த பணியை செய்ய கடமைப்பட்ட துறையினர் அபராதம் வசூல் செய்யும் போது சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் பார்த்து கொள்ளுவதுதான். இன்றைய சூழ்நிலையில் காவலர்களின் மிக முக்கிய கடமை சட்ட ஒழுங்கை காப்பது, தமிழ்நாட்டிலேயே அதிக பணிச்சுமையுள்ள துறை எது என்றால் காவல்துறைதான். இவர்கள் தங்களுக்குறிய பணிகளையும் செய்து கொண்டு மற்ற துறை சார்ந்த பணிகளையும் செய்து வருகிறார்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் போது சாலைப் பணிகளையும் இவர்கள் செய்கிறார்கள். இப்படி அனைத்து பணிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் இவர்கள் பொதுமக்களின் நலன் மீது கொண்ட அக்கரைதான் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும்.