மதுரை, மேலமாசி வீதி பகுதியில் வங்கியில் தீ விபத்து, ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசம்
மதுரை,மேல மாசி வீதியில் உள்ள் வங்கியில் தீ விபத்தில் ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமானது.
மதுரை, மேலமாசி வீதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து வங்கியிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம், பெரியார் நிலையம் தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
இந்த நிலையில் திலகர் திடல் C4, காவல்நிலைய காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் திடீரென ஏற்ப்பட்ட மின் கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் ஆவணங்கள்,மற்றும் கணினி மின்விசிறி, உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரையில் தீ விபத்துக்கள் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது, பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திலகர் திடல் C4, காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.