திருநெல்வேலி மாநகரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்கச்செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இப்பணியினை வாகன ஓட்டிகள் பாராட்டி மனதார நன்றியினை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ்
ஆற்றில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பவானி ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு படையினர் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.
நீதி மன்றத் தீர்ப்புகள் மனைவியின் கடனுக்கு கணவர் கைது செய்யப்படுவாரா?(Gujarat High court (19938/2016)Harshad Manubhai Vs State of GujaratDecided on 04.04.2017 ஒரு வங்கியில் கணவன் மனைவி இருவரது பெயர்களிலும் ஒரே கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருகிறார்கள் மனைவி ஒரு அழகு நிலையம் தொடங்கிட திட்டமிட்டு வெளி நபரிடம் கடன் வாங்கி அதற்கு ஈடாக காசோலைகளில் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார் கணவன் தொடக்க நிலையிலேயே புதிதாக எந்த தொழிலும் தொடங்கிட வேண்டாம் அதுவும் கடன் வாங்கி […]
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். […]