திருநெல்வேலி மாநகரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்கச்செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இப்பணியினை வாகன ஓட்டிகள் பாராட்டி மனதார நன்றியினை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ்
கடை ஊழியரிடம் 101 பவுன் நகை கொள்ளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜவஹர் பஜார் தாதன்ஜி தெருவை சேர்ந்தவர் ஜித்தேந்திர குமார் ரமேஷ் ஜெயின் (வயது36). இவர் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.கடையில் தயாரிக்கும் நகைகளை தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் ஜித்தேந்திர குமார் விற்பனை செய்து வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக முன்பு மும்பை யில் இருந்து மதுரைக்கு வந்த அவர் பெரியார் […]
விருதுநகர் மாவட்டம்:- போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்… பெருகிவரும் வாகனத்தினால் அன்றாடம் உயிரிழப்பு மற்றும் எத்தனையோ பிரச்சினைகள்தான். அந்தவகையில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் துறையினருக்கு பேருதவியாக APTEX என்ற ஜவுளிக்கடை உரிமையாளர் தம்முடைய சொந்த செலவில் தயார்செய்து பொதுமக்களின் முன்னிலையில் பொதுமக்களுக்காக பேரிகார்டுகளை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களிடம் அளித்தார். இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நாடார் சிவன்கோவில் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்சியின்போது பொதுமக்களுக்காக இலவசமுககவசமும் வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தத்தில் தாய் […]
சிலைகள் திருடிய 6 நபர்களை அதிரடியாக கைது செய்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் இருக்கும் அண்ணாமலையார் சிவன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று நான்கு ஐம்பொன் சிலைகளை திருடி சென்றார்கள். ஐம்பொன் சிலைகளை திருடியது கோவிலில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் வாடிப்பட்டி காவல்துறையினர் திருடிய நபர்களை காவல்துறை தேடி வந்த நிலையில் சிலை திருடிய குற்றவாளிகளை […]