கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (26.4.2021) காலை K-4 அண்ணா நகர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் காவலர் திரு.S.மகராஜனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. உடன் கூடுதல் காவல் ஆணையர்கள் இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் திரு மகராஜன் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்