Police Department News

மதுரையில் கொரோனாவால் போக்குவரத்து காவலர் பலி

மதுரையில் கொரோனாவால் போக்குவரத்து காவலர் பலி

மதுரையில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் பரமசாமி நேற்று மாலை கொரோனா தெற்று நோய்க்கு பலியானார்.
மதுரை கிரைம்பிராஞ்ச் குடியிருப்பில் வசித்து வரும் பரமசாமி வயது 45/21, இவர் தெற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்புஏற்பட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உண்டு அதில் ஒரு மகன் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சென்ற முதல் கொரோனா காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உடல் நலம் பெற்று வந்தார்.

இவர் இரண்டாவது அலை கொரோனாவில் உயிரிழந்தது, மதுரை காவல்துறையினர் மத்தியில் பெரும் கலக்கத்தையும், சோகத்தையும் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.