Police Department News

மதுரை செல்லூர் பகுதியில், மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை செல்லூர் பகுதியில், மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் 3 வது தெரு, அன்னை இல்லம் செட்டியார் காம்பெளவுண்டில் குடியிருக்கும் குருசாமி மனைவி குருவம்மாள் வயது 45/21, இவரின் கணவர் குருசாமி அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார், அதன் பின் இவர் தனது மகன்கள் சரவணன், ரமேஸ், மற்றும் சுரேஸ் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.இவர் கூடை பின்னும் வேலை செய்து வந்தார், மகன்கள் சரவணனும் சுரேஷும் பெயிண்டிங்க் வேலை செய்து வந்தனர், இளைய மகன் ரமேஸ் கூடை பின்னும் வேலை செய்து வந்தார். குருவம்மாளின் மகள் நாகராணியை கும்பகோனத்தில் திருமணம் செய்து கொடுத்து அவர்கள் அங்கே வசித்து வந்தனர். இந்த நிலையில் மகன் சுரேஷுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதும் குடிக்கதே என்று சொன்னாலும் கேட்பதில்லை, மேலும் தனது தந்தை இறந்ததிலிருந்து மிகுந்த மனஉளச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று 05/05/21 அன்று பகல் 2 மணியளவில் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் மாலை நான்கு மணி வரை தன் மகனை தாய் குருவம்மாள் பார்த்துள்ளார். அதன்பின் மாலை 4.30 மணியளவில இவர் பக்கத்து அறையில் கூடை பின்னிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு சிறுமி ஹேமா என்ற பெண் இவரிடம் ஓடி வந்து பக்கத்து அறையில் சுரேஷ் தூக்கிட்டு தொங்குவதாக கூறியுள்ளார், இதை கேட்டு உடனே அவர் சென்று பார்த்தபோது அங்கே தன் வீட்டில் அஸ்பிடாஸ் சீட்டில் உத்தரத்தில் சேலையால் தனக்குதானே தூக்கிட்டு தொங்கி கொண்டிருந்தார் இதனை கண்ட குருவம்மாள் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் பக்கத்து வீட்டு ராஜேந்திரன் என்பவரது உதவியுடன் தூக்கில் தொங்கியவரை இறக்கி பார்த்த போது அவர் இறந்த நிலையிலிருந்தார் உடனே செல்லூர் D2, காவல்நிலையத்தில் தகவல் கொடுத்து சட்டப்படி விசாரணை செய்து மகனின் நல்லடக்கத்திற்கு உதவும்படி புகார் மனுவை கொடுத்துள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து சுரேஷின் இறப்பு பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.