Police Department News

கணவன் மனைவி சண்டையில், மனைவி மரணம், மேலூர் போலீசார் விசாரணை

கணவன் மனைவி சண்டையில், மனைவி மரணம், மேலூர் போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், மேலூர் அழகர் கோவில் ரோட்டில் உள்ள பழைய சக்கம்பட்டியில் வசித்து வரும் ராஜேந்திரன் மகன் குரு வயது 37/21, இவரது தங்கை சூர்யா, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கைகலப்பு, பிரச்சனைகள் வருவது வழக்கம், இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி மாலை 6.30 மணியளவில் சூர்யாவின் அக்கா வனிதாவுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு பிரச்சனை செய்து கொள்வார். இந்த நிலையில் தங்கை சூர்யாவிற்கும் அவரது கணவர் கிரூஷ்ணமூர்த்திக்கும் பிரச்சனை ஏற்பட்டு கிருஷ்ணமூர்த்தி தன் மனைவியை அடித்துள்ளார் அடி வாங்கிய சூர்யா மூச்சு பேச்சில்லாம் கிடந்துள்ளார். உடனே அந்த வழியாக வந்த ஆட்டோவில் அக்கம் பக்கம் உள்ள சிலரின் உதவியுடன் அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சூர்யா வீட்டருகே குடியிருக்கும் சாமியப்பன் மகன் பாண்டிகுமார் போன் மூலம் தகவல் சொல்ல உடனே மருத்துவ மனைக்கு விரைந்து சென்று பார்த்த போது தங்கை சூர்யா இறந்து விட்டதாக தகவல் கூறினார்கள். உடனை மேலூர் காவல்நிலையம் வந்து தன் தங்கை இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் மனுவை கொடுத்தார், புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் சார்ளஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திரு. சார்ளஸ் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றார.

Leave a Reply

Your email address will not be published.