Police Department News

கொரோனாவுக்கு கடலாடி சார்பு ஆய்வாளர் பலி, போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

கொரோனாவுக்கு கடலாடி சார்பு ஆய்வாளர் பலி, போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

ராமநாதபுர மாவட்டம் கடலாடி காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன் வயது 58/21, இவர் விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டி புதூரைச் சேர்ந்தவர்.

தேர்தல் பறக்கும் படை பணியில் பணியாற்றினார். கடந்த 14 ம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்ட இவர் சொந்த ஊருக்கு சென்றார். பரிசோதனை செய்து கொண்ட போது அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன் தினம் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனாவிற்கு பலியான சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டனுக்கு அன்னலெக்ஷிமி என்ற மனைவியும் விஜயலெக்ஷிமி என்ற மகளும், பாண்டியராஜன் , கனேஷ்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் பணியாற்றி வந்த கடலாடி காவல்நிலையத்தில் நேற்று அவரது உருவ படத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக், கடலாடி காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. தீபா மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.