கொரோனா நோய்க்கு பெண் சார்பு ஆய்வாளர் பலி
மதுரை மாநகர் டி.பி.ரோடு வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி வயது 44. இவர், திருச்சி ஒன்றாவது போலீஸ் பட்டாலியனில் சார்பு ஆய்வாளராக உள்ளார். இவர் 1997 ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர் அங்கு இவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் சில நாட்களுக்கு முன் மதுரை ஆறாவது பட்டாலியன் சார்பு ஆய்வாளர் திருமதி., லட்சுமி அவர்களும் கொரோனாவுக்கு பலியானது குறிப்பித்தக்கது.