Police Department News

மதுரை, பேலஸ் ரோடு பகுதியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது குழந்தை கொலை

மதுரை, பேலஸ் ரோடு பகுதியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது குழந்தை கொலை

மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பேலஸ் ரோட்டில், தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் கிருஷணக்குமார் வயது 38/21, இவரது மனைவி இந்துமதி வயது 32/21, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வசித்து வரும் வீட்டை ஒட்டியே கிருஷ்ணகுமாரின் தாயார் மற்றும் அவரது தம்பி ராம்குமார் வயது 36, அவர்களும் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே வெகு நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் இரண்டு பேரின் வீட்டிற்கும் வாஷ் பேசனுக்கு தண்ணீர் வரும் பைப்பை ராம்குமார் உடைத்து விட்டதாக தெரிய வருகிறது, இதனால் கிருஷ்ணகுமாருக்கும் அவரது தம்பி ராம்குமாருக்கு தகராறு ஏற்பட்டு ராம்குமார் கத்தியால் கிருஷ்ணகுமாரையும் அவரது இரண்டரை வயது குழந்தையையும் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர், உடனே அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை ஏற்னவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், கிருஷ்ண குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது, குழந்தை இறந்த தகவலை தனது உறவினர்களுக்கு தெரிவித்து விட்டு மதுரை விளக்குதூண் B1, காவல் நிலையம் வந்து நடந்த சம்பவத்தை கூறி எதிரியின் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர், புகாரை பெற்று கொண்டதும் ஆய்வாளர் திருமதி ஜான்ஸிராணி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திருமதி ஜான்ஸிராணி அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.