சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு)தலைமையில் Dr.பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
இன்று 05.06.2021
கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலும் மற்றும் 2021 தற்போது முழு ஊரடங்கு தொடங்கினது முதல் இன்று வரை பெசன்ட் நகர் பகுதியில் சாலையில் வசிக்கும் சிறியோர் பெரியோர் தூய்மை பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர்கள் நலிவுற்ற குடும்பங்கள் ஆகிய அனைவருக்கும் கபசுர குடிநீர் மாஸ்க் சனிடைசர் தினமும் 100 பேருக்கு உணவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின்படி வழங்கிவருகிறார். இப்படிப்பட்ட செயல்களை பார்த்து காவல்துறையினரும் மற்றும் பெசணட் நகர் பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.