மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி செல் போனை பறித்த சென்ற இருவர் கைது
மதுரை மநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மீனாம்பாள்புரம் வ.உ.சி 2 வது தெருவில் வசித்து வரும் மதியழகன் மகன் விக்னேஷ் வயது 17/21, இவர் தனது தாய் தந்தையாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார், இவர் தனபால் மேல் நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி இரவு 8 மணியளவில் தன் வீட்டு முன்பு நின்றுகொண்டு தன் பள்ளி பாடம் சம்பந்தமாக தன் நண்பரிடம் செல் போனில் பேசிக் கொண்டிருந்தார் அந்த சமயம் அந்த வழியாக கையில் அரிவாளுடன் வந்த இரண்டு நபர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி செல் போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர், செல் போனை பறி கொடுத்த விக்னேஷ் செல்லூர் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி.S.வேதவள்ளி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.ஆண்டவர் அவர்கள் வழக்கு பதிவு செய்தார், மேற்படி வழக்கை ஆய்வாளர் அவர்கள் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் மதுரை தல்லாகுளம் D1, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதே குற்றவாளிகள் மீண்டும் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் அவர்கள் பெயர் பர்வின், மற்றும் ஹரிஹரன் என தெரிய வந்தது. அதன் பின் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.