Police Recruitment

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

கல்லிடைகுறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முத்து வயது 53 என்பவரின் மகன் மணிகண்டன், மணிகண்டன் மனைவியின் தங்கையை அதே பகுதியை சேர்ந்த கசமுத்து வயது 25, என்பவர் திருமணம் செய்து கொள்வதாகவும், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாப்பான்குளத்திலிருந்து அப்பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளதை அறிந்த கசமுத்து, முத்துவின் மகன் மணிகண்டனிடம் பிரச்சனை செய்துள்ளார். இதனை எதிரி மனதில் வைத்துக் கொண்டு அயன் சிங்கம் பட்டியில் வைத்து இன்று முத்துவையும், மணிகண்டனையும், அவரது உறவினர் பிரம்மாச்சியையும் அவதூறாகப் பேசியும்,ஸ்குருடிரைவரால் குத்தி, கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்து கல்லிடை குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் திரு.முருகேஷ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மூவரையும் தாக்கிய கசமுத்துவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.