மதுரை செல்லூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 ரவுடிகளை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த செல்லூர் காவல் ஆய்வாளர்
மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்திற்குட்பட்ட தத்தனெரி, அருள்தாஸ்புரத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் மலையரசன் மகன் அழகர் வயது 21/21, இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவர் கடந்த 18 ம் தேதி காலை 7 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின்ரோட்டில் தன் சொந்த வேலை சம்பந்தமாக வந்து கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் நடந்து வந்த மூன்று ரவுடிகள் இவரை வழி மறித்து தண்ணியடிக்க பணம் கேட்டுள்ளனர் அதற்கு அவர் தர மறுக்கவே, தாங்கள் மூன்றும் பேரும் இந்த செல்லூர் ஏரியாவிலேயே பெரிய ரவுடி பணம் தர மறுத்தால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம் என மிரட்டி கத்தியை அவர் அடி வயிற்றில் வைத்து அழுத்திகொண்டே உயிர் பயத்தை ஏற்படுத்தி அவர் பையிலிருந்த 500/− ரூபாயை பறித்து கொண்டனர், உடனே இவர் சத்தம் போடவே அக்கம் பகத்தினர் ஓடி வரவே தன்னிடமிருந்த கத்தியை சுழற்றியபடி யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொன்று விடுவோம் என மிரட்டியபடி தப்பியோடினர், பணத்தை பறிகொடுத்த அழகர் செல்லூர் D2, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்தார், செல்லூர் D2, காவல்நிலையத்திற்கு ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு. மாடசாமி அவர்கள் தன் அதிரடி நடவடிக்கையால் மேற்படி மூன்று ரவுடிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் செல்லூர் ஏரியாவில் பிரபல ரவுடிகள் பெயர், பாட்ஷா என்ற ரமேஷ், ஜெயசந்திரன் என்ற ராசுகுட்டி, முத்துப்பாண்டி என்ற மீன்முள் முத்துப்பாண்டி என தெரிய வந்தது, அவர்களை விசாரித்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.