பள்ளிபாளையம் பகுதியில் சிறுமியை மணந்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
பள்ளிபாளையம் காவேரிக்கரை ஒன்பதாம்படியை செர்ந்தவன் கோபி வயது 22/21, இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமண்ம் முடிந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் ஓடப்பள்ளியை சேர்ந்த 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த 18 ம் தேதி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் முயற்சி செய்துள்ளார், இது குறித்து சிறுமியின் தாயார் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.சாந்தமூர்த்தி அவர்கள் தலைமையில் போலீசார் தேடி வந்தனர் இந்த நிலையில் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியையும் கோபியையும் பார்த்தனர். சிறுமியை மீட்டு, அந்த வாலிபரை பிடித்து பள்ளிபாளையம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் கோபிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டதால் தனியாக வாழ்ந்து வந்துள்ளான். மேலும் வேலைக்கு சென்று வரும்போது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக ஒப்புக்கொண்டான். அவன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.