Police Department News

மதுரை தத்தனெரி பகுதியில் வாலிபருக்கு கத்திகுத்து 2 ரவுடிகள் அதிரடியாக கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை தத்தனெரி பகுதியில் வாலிபருக்கு கத்திகுத்து 2 ரவுடிகள் அதிரடியாக கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி கண்மாய்கரை, கனேசாபுரம் பகுதியில் வசிப்பவர் பாண்டி மகன் மாணிக்கம் என்ற மண்டை ஓடு மாணிக்கம் வயது 21/21, இவர் மதுரை தத்தனெரி சுடுகாட்டில் கைவேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 17 ம் தேதி மாலை 4 மணியளவில் தன் தாய், மற்றும் அக்காள் ஆகியோருடன் தன் வீட்டருகே உள்ள போஸ் தேவர் காம்பவுண்ட் அருகில் பேசிக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த பாலமுருகன், மற்றும் பாட்ஷா என்ற ரமேஷ் இருவரும் இவரிடம் தகராறு செய்துள்ளனர், அதில் பாலமுருகன் என்பவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணிக்கத்தை குத்த வந்த போது அவரது தாயும் அக்காளும் தடுத்தும் அவர்களை கீழே தள்ளி விட்டு மாணிக்கத்தின் கழுத்து பகுதியில் குத்தி ரத்த காயத்தை ஏற்படுத்தி விட்டுதப்பி ஓடினார் இதனை தொடர்ந்து குத்துப்பட்ட மாணிக்கத்தை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பின் அரசு மருத்துவ மனையிலிருந்து கிடைத்த தகவலின்படி செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள் ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்களுக்கு தகவல் கூறி அவரது அனுமதி பெற்று மருத்துவ மனை சென்று பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து புகாரை பெற்று ஆய்வளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்துள்ளார், புகாரின் அடிப்படையில் பாலமுருகன், மற்றும் பாட்ஷா என்ற ரமேஷை கைது செய்து விசாரணை செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி மேற்படி நபர்களை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.