Police Recruitment

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்
சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தை சீருடை பணியாளர் தேர்வாணைய காவல்துறை தலைவர் 10.07.2021 – ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்

தமிழக காவல்துறையில் 2020 – ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 11741 + 72 ( BL ) இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு எதிர்வரும் 26.07.2021 ( திங்கள் கிழமை ) அன்று நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மொத்தம் 1404 நபர்களுக்கு (890 – ஆண்கள் 514 – பெண்கள்) நடைபெற உள்ளது. இதில் அடிப்படை உடற்தகுதிகளான பெண்களுக்கு ( உயரம் , 400 மீட்டர் ஓட்டம் ), ஆண்களுக்கு ( உயரம், மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டம் ) போன்றவையுடன் கயிறு ஏறுதல், 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், பந்து எறிதல் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.

உடற்தகுதி தேர்வுகள் நடைபெற இருக்கும் இடங்களை இன்று 10.07.2021-ஆம் தேதி கார்த்திகேயன் இ.கா.ப., காவல்துறை தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்‌‌‌தில்‌‌‌ பார்வையிட்டனர்‌‌‌

மேலும் ஆயுதப்படை மைதானத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., எடுத்து கூறினார்

Leave a Reply

Your email address will not be published.