Police Department News

16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

29.07.2021
திண்டுக்கல் மாவட்டம்
தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடந்த மாதம் திருச்சியைச் சேர்ந்த பாபு (32) என்பவர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் இ.ஆ.ப அவர்கள் பாபுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள் பாபுவை மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.