Police Department News

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் அடிக்கடி போன் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம் மாயம் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் அடிக்கடி போன் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம் மாயம் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்

மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான, மதுரை சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பாண்டிமுருகன் மனைவி, வாசுமீனா வயது 40/21 இவரது கணவர் லோடு மேனாக வேலை செய்து வருகிறார்,, இவர்களுக்கு மூன்று மகள்கள் பெயர் யாழினி, சத்யா, விஷ்ணுப்பிரியா, இதில் மூத்த மகள் யாழினி வயது 18/21, இவர் B.A., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்சமயம் கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன் லைனில் படித்து வருகிறார். இவர் எப்போதும் போனில் கேம் விளையாடி வந்ததாலும் அதிக நேரம் போனிலேயே பேசிக் கொண்டே இருந்ததாலும் இவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில் இவர் இருந்துள்ளார், இந்த நிலையில் கடந்த 27 ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் இவரது தாய் தூங்கி எழுந்து பார்த்த போது தனது மகள் யாழினியை காணவில்லை, தனது உறவினர் வீடு, மற்றும் நண்பர்கள் வீடு என்று அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்து கிடைக்காத காரனத்தால் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலையம் வந்து காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் மனு கொடுத்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல ஆய்வாளர் திரு, கதிர்வேல் அவர்களின் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திலீபன் அவர்கள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.